×

மேகதாது அணை விவகாரத்தில் தலையிட தமிழகத்துக்கு உரிமை இல்லை: கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கருத்து

பெங்களூரு: மேகதாது அணை விவகாரத்தில் தலையிட தமிழகத்துக்கு உரிமை இல்லை என கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு அரசியல் செய்வதாக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை சாடியுள்ளார். இது தொடர்பாக பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; இதுவரை 15 கூட்டங்கள் நடைபெற்றுள்ளதாகவும், இதுவரை எதிர்ப்பு தெரிவிக்காமல் இறுதி கட்டத்தில் தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறினார்.

தங்கள் நீர் உரிமை மீது தமிழ்நாடு தொடுக்கும் போர் என்றும் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். மேகதாதுவில் அணை கட்டுவதால் தமிழ்நாடு பயன்பெறும் என கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். எங்கள் நீர் எங்கள் உரிமை என கூறிய அவர், எங்கள் இடத்தில் எங்கள் மக்களுக்காக எங்கள் பணத்தில் கட்டப்படும் அணையை கட்ட கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.


Tags : Tamil Nadu ,Megha Dadu ,dam ,Karnataka ,Chief Minister ,Basavaraj Puppet , Tamil Nadu has no right to interfere in the Megha Dadu dam issue: Karnataka Chief Minister Basavaraj Puppet Comment
× RELATED கோடை மழை கொட்டியும் நீர்வரத்து குறைவு;...